நுவரெலியா ஹக்கலை பகுதியில் மண்சரிவால் வீடுகளை இழந்த 23 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் கடந்த ஆறு மாதங்களாக தற்காலிக கூடாரங்களில் கடும் அவலநிலையில வாழ்ந்து வருகின்றனர். அதிகாரிகள் மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நிலவும் கடும் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.