மோசமான வானிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை

நிலவும் கடும் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Published on: 15 May 2026, 07:45 am
10

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
மோசமான வானிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை

நிலவி வரும் கடும் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (15) விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் கல்வி வலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளும் இன்று செயல்படாது. இந்த விடுமுறை தொடர்பான தகவல் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறை நாளில் மாணவர்கள் அல்லது ஆசிரியர்களை எந்தவொரு கல்வி அல்லது பிற நடவடிக்கைகளுக்காகவும் பாடசாலைகளுக்கு அழைக்கக்கூடாது என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து நிலவும் மோசமான வானிலை சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாணவர்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.