மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையால் மவுசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மவுசாக்கலையில் 5 அடி மற்றும் காசல்ரீயில் 15 அடி நீர்மட்ட உயர்வு பதிவாகியுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.