காவல்துறை தரப்பு விளக்கத்தின்படி, நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி ஒன்றரை மாதங்களாக போராடியதாக தவெக நிர்வாகிகள் கூறியது தவறானது. பிப்ரவரி 6-ஆம் தேதிதான் முதல் மனு அளிக்கப்பட்டதாகவும், பின்னர் பிப்ரவரி 18-ஆம் தேதி திருத்தப்பட்ட மனு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், போதைப்பொருள் பிரச்சினை அதிகரித்துள்ளதாகவும், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.