இந்திய வீடமைப்புத் திட்டத்தின் 03ஆம் கட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட 145 வீடுகளை இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஸ்ணன் நிகழ்நிலை முறைமை ஊடாக கையளித்து வைத்தார்.
இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நுவரெலியாவில் உள்ள சீதா அம்மன் ஆலயத்திலும் அனுமன் கோயிலிலும் வழிபாடு செய்தார். இந்தியா–இலங்கை கலாசார உறவுகள் மீண்டும் வலுப்பெறும் என அவர் தெரிவித்தார்.
வட்டவளை கரோலினா பகுதியில் முச்சக்கர வண்டி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து. தாய் மற்றும் இரண்டு மகள்கள் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹட்டன் சிங்கமலை வனப்பகுதியில் ஆராய்ச்சிப் பணிக்காகச் சென்று, வழிதெரியாமல் மலை உச்சியில் சிக்கித் தவித்த நெதர்லாந்து நாட்டு யுவதியை ஹட்டன் பொலிஸார் சாதுரியமாக மீட்டுள்ளனர்.
நுவரெலியா - கொத்மலை வீதியில் 120 அடி பள்ளத்தில் வேன் வீழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், காயங்களுடன் துணிச்சலாக மேலே ஏறி வந்து தனது குடும்பத்தையே காப்பாற்றியுள்ளார் 12 வயது சிறுவன் ஹிரந்த.
கண்டி, மஹியாவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 7 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் – போடைஸ் பிரதான வீதியின் போடைஸ் என்சி பகுதியில் இன்று வியாழக்கிழமை (12) காலை சுமார் 11.00 மணியளவில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
டயகம நகரிலிருந்து வெஸ்ட் டயகம நட்போன் தோட்டத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் நேற்று (22) இரவு 9 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்குத் தகுதி பெற்ற 16,800 பயனாளிகள் இதுவரையில் தமக்கான வங்கி கணக்குகளை ஆரம்பிக்கவில்லை என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அரசு அதிகாரிகள், அரச சேவையாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள் இன்று (17) பதுளை மாவட்ட செயலகம் முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, கம்பளைக்கு விஜயம் செய்து டிட்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிட்டார்.
சிரேஷ்ட தொழிற்சங்க தலைவர் சிவசாமி வீரப்பன் கலந்து கொண்டு, அன்னாரின் பண்புகள், போராட்ட மனப்பாங்கு மற்றும் சமூக நீதி மீதான அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்தார்.